Wednesday, 20 November 2024

குட்டி கதை

 


ஒரு கிராமத்தில் யார் அறிவாளி என்று ஒரு போட்டி!


இளைய தலைமுறை தான் அறிவாளிகள் என்று இளைஞர்கள் சொல்ல!


வயதில் பெரியவர்கள் தான் என்று பெரியவர்கள் சொல்ல!


சரி யார் அறிவாளிகள் என்று பார்க்க இருவருக்கும் ஒரு செடியை கொடுத்து ஒரு மாதம் டைம் கொடுத்து யார் இந்த செடியை நன்றாக வளர்க்கிறார்கள் என்று பார்க்கலாம் என்றார்கள்!


இளைஞன் செடியை நல்ல இடமாக தோண்டி நட்டு வைத்து தினமும் நீரும் உரமும் தெளித்து நன்றாக வளர்த்தான்!


ஆனால் பெரியவர் நட்டு வைத்ததோடு சரி! தண்ணீரும் ஊற்ற வில்லை உரமும் போட வில்லை!


ஒரு மாதம் ஓடியது இளைஞன் வைத்த செடி நன்றாக வளர்ந்து இருந்தது.


பெரியவர் வைத்த செடி சிறியதாக வளர்ந்து இருந்தது.


அன்று இரவு திடீர் என்று பெரிய காற்றுடன் மழை !


இளைஞன் வைத்த செடி காற்றில் ஒடிந்து மழையில்


அடித்து செல்லப்பட்டது!


ஆனால் பெரியவர் வைத்த செடி அப்படியே மழை


புயல் தாங்கி நின்றது!


மறு நாள் காலை இளைஞன் பெரியவர் கிட்ட இது எப்படி சாத்தியம்! நான் தினம் நீர் ஊற்றி உரம் போற்று


நன்றாக வளர்ந்து இருந்த செடி ஒடிந்து மழையில்


அடித்து செல்லப்பட்டது! நீங்கள் தண்ணீர் கூட ஊற்ற வில்லை ஆனால் செடி எப்படி புயல் மழையை


தாங்கி நிற்கிறது என்று கேட்க ! அதற்கு அவர் சொன்னார் ! நீ எல்லாம் அதற்கு கொடுத்தால் அது சுகமாக வேர் விடாமல் அப்படியே இருந்து விட்டது.


நான் வைத்த செடி நான் நீர் ஊற்றாததால் உயிர் வாழ நிலத்தில் வேர் ஊன்றி நன்கு வளர்ந்து விட்டது!


இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையும் அப்படித்தான் என்றார்.💚

Wednesday, 28 August 2024

பள்ளிப் பேருந்திற்கு மற்ற நிறங்களை தேர்ந்தெடுக்காமல் ஏன் மஞ்சள் நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டது

 பள்ளிப் பேருந்திற்கு மற்ற நிறங்களை தேர்ந்தெடுக்காமல் ஏன் மஞ்சள் நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டது? அதன் பின்னணியில் உள்ள ரகசியம் என்ன? தெரிந்து கொள்ளலாம்


பள்ளி பேருந்து மஞ்சள் நிறத்தில் உள்ளதற்கு அறிவியல் காரணம் உள்ளது. மற்ற நிறங்களை விட மஞ்சள் நிறம் அதிகம் தெரியும். ஆகவே விபத்துகளை தவிர்க்க பள்ளி பேருந்துகளுக்கு மஞ்சள் வண்ணம் பூசப்படுகிறது. சிவப்பு நிறம் நீண்ட அலைநீளம் மற்றும் 650 நானோ மீட்டர்களை கொண்டது. இதன் விளைவாக, தொலைதூரத்திலிருந்து சிவப்பு நிறத்தை நம்மால் காண முடியும். ஆனால் மஞ்சள் நிறத்தின் அலைநீளம் வெறும் 580 நானோ மீட்டர்கள் மட்டுமே.இருந்தபோதும் பள்ளிப் பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் பயன்படுத்தப்படுவது ஏன் என்ற கேள்வி எழலாம். அதற்கும் ஒரு காரணம் உள்ளது. ஏனென்றால், மஞ்சள் நிறத்திற்கான லேட்டரல் பெரிஃபெரல் விஷன்(எல்பிவி) சிவப்பு நிறத்தை விட 1.24 மடங்கு அதிகம். இதன் விளைவாக, அதன் பார்வை சிவப்பு நிறத்தை விட அதிகமாக உள்ளது.இதனால் மஞ்சள் நிறத்தை மழை மற்றும் மூடுபனியில் கூட நம்மால் தூரத்தில் இருந்து எளிதில் பார்க்க முடியும். எனவே பள்ளி வாகனம் நம் கண்ணில் படாவிட்டாலும் மஞ்சள் நிறத்தில் இருப்பதால் எளிதில் கண்டு பிடிக்க முடியும். அதனால்தான் பள்ளிப் பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் உள்ளன.

Wednesday, 14 August 2024

NIRF RANKING 2024 ENGINEERING COLLEGE

மத்தியக் கல்வி அமைச்சகத்தின் தேசிய தரவரிசைப் பட்டியலில் உள்ள டாப் 100 பொறியியல் கல்லூரிகளில் தமிழ்நாட்டில் இருந்து 14 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் தேசியக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் (National Institutional Ranking Framework) என்ஐஆர்எப் பட்டியல் என்ற பெயரில் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இதில் தொடர்ந்து 6-வது முறையாக இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக ஐஐடி சென்னை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தேசியக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு கல்வி நிறுவனமும் 5 முக்கியக் காரணிகளை வைத்து மதிப்பிடப்படுகிறது. அதாவது 

கற்பித்தல், கற்றல் மற்றும் அதற்கான வளங்கள் 

(Teaching Learning & Resources), 

ஆராய்ச்சி மற்றும் பயிற்சி 

(Research and Professional Practice), 

பட்டப்படிப்பு 

(Graduation Outcome), 

வெளிப்படுதல் மற்றும் உள்ளடக்கம் 

(Outreach & Inclusivity), 

கருத்து (Perception) 

ஆகிய 5 காரணிகள் தரவரிசைப் பட்டியலைத் தீர்மானிக்கின்றன.

இந்த நிலையில் மத்தியக் கல்வி அமைச்சகத்தின் தேசிய தரவரிசைப் பட்டியலில் உள்ள டாப் 100 பொறியியல் கல்லூரிகளில் தமிழ்நாட்டில் இருந்து 14 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் முழு பட்டியல் இதோ..!


கல்லூரிபெயர் - தரவரிசையில்பெற்றுள்ளஇடம்

ஐஐடி சென்னை - 1

என்ஐடி திருச்சி - 9

விஐடி வேலூர்- 11

எஸ்.ஆர்.எம். கல்லூரி                          (S.R.M. Institute of Science and Technology), சென்னை - 13

அண்ணா பல்கலைக்கழகம் - 14

அமிர்த விஸ்வ வித்யாபீடம், கோவை - 23

கலசலிங்கம் கல்லூரி            (Kalasalingam Academy of Research and Education), ஸ்ரீவில்லிப்புத்தூர் - 36

சாஸ்திரா பல்கலைக்கழகம்    (Shanmugha Arts Science Technology & Research Academy), தஞ்சாவூர் - 38

எஸ்.எஸ்.என். கல்லூரி                              (Sri Sivasubramaniya Nadar College of Engineering), காலவாக்கம் - 46

சவீதா கல்லூரி                                  (Saveetha Institute of Medical and Technical Sciences), சென்னை - 64

சத்யபாமா கல்லூரி                    (Sathyabama Institute of Science and Technology), சென்னை - 66

பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி       (PSG College of Technology) , கோவை - 67

ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி                             (Sri Krishna College of Engineering and Technology), கோவை - 83

வேல் டெக் கல்லூரி                                   (Vel Tech Rangarajan Dr.Sagunthala R & D Institute of Science and Technology), சென்னை - 86

இதில் கடந்த ஆண்டு இடம்பெற்று இருந்த சென்னை, ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி இந்த முறை டாப் 100 இடத்தை இழந்துள்ளது.


Thursday, 2 May 2024

நீட் (NEET) தேர்வில் வெற்றி பெற டிப்ஸ்

 நீட் (NEET) தேர்வில் வெற்றி பெற டிப்ஸ்



1.மொத்தம் *200* வினாக்கள் கேட்கப்படும்.

இதில்

 இயற்பியல் (Physics)50,

 வேதியியல் (Chemistry)50,

 தாவரவியல் (Botany)50

 மற்றும்

 விலங்கியல் (Zoology) 50 

என அமைந்திருக்கும்‌.


2. ஒவ்வொரு  பாடத்திலும் பகுதி 'A' மற்றும் பகுதி 'B' என இரண்டு வகை இருக்கும்.


3. 'A' பகுதியில் கேட்கப்படும் 35 கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும்.


4.பகுதி 'B' பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள 15 வினாக்களில் ஏதேனும் 10  வினாக்களுக்கு விடையளித்தால் போதும்.

5 வினாக்கள் சாய்ஸ் ஆகும்.


5.ஓவ்வொரு பாடத்திலும் உள்ள 'B'பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும் ‌ஏனெனில் இவை அனைத்தும், *சிந்தித்து விடை எழுதும்* 

 *சிந்தனையை தூண்டும்* திறனறி வினாக்கள் (*HOT -Higher Order Thinking Skills Questions*)வகை ஆகும்.

எனவே மிகவும் கவனமாக இவ்வகை வினாக்களுக்கு விடை அளிக்க வேண்டும்.


6.மொத்தம் கொடுக்கப்பட்டுள்ள 

 *200 வினாக்களில் 180 வினாக்களுக்கு* மட்டுமே விடையளிக்க வேண்டும்.

ஓவ்வொரு வினாவிற்கும் 

 *4 மதிப்பெண் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்* ஆகும்.


7. *தவறான விடைகள்* ஒவ்வொன்றிற்கும் *1 மதிப்பெண் கழிக்கப்படும்.எனவே* வினாக்களை மிகவும் பொறுமையாக, கவனமாக, முழுமையாக படித்து புரிந்து சரியான விடையை தேர்வு செய்து எழுத வேண்டும்.

 *அவசரப் படுதல் கூடாது.* 

' *ஓ.எம்.ஆர்.சீட்டில் (OMR) விடையை ஒருமுறை குறித்த பிறகு மாற்றம் செய்ய* *இயலாது* .


8. *அதிக மதிப்பெண் பெற*

 உயிரியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

முதலில் மிகவும் *நன்கு பதில் தெரிந்த* *தாவரவியல் மற்றும் விலங்கியல்* பகுதிகளில் உள்ள வினாக்களுக்கு விடை அளிக்கவும்.


9. *இயற்பியல் மற்றும் வேதியியல்* பகுதியில் உள்ள வினாக்களுக்கும் விடை அளித்தால் மட்டுமே *650 மதிப்பெண்களுக்கு* மேலாக மதிப்பெண்கள் பெற முடியும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.


10.முடிந்தவரை *விடை தெரியாத கேள்விகளுக்கு* ( Doubtfull Answer)  பதில் அளிப்பதை தவிர்க்க வேண்டும்.

இல்லையெனில் *நெகடிவ் மதிப்பெண் ஆகிவிடும்* .


11.நீட் தேர்வில் கேட்கப்படும் அனைத்துமே MCQ ( Multiple Choice Questions)  வகைதான்.

ஆனால் ஒவ்வொரு வினாவும் ஒவ்வொரு வகையாக  இருக்கும்.

குறிப்பாக 

1)சரியான கூற்றினை தேர்ந்தேடு 

2) தவறான கூற்றினை தேர்ந்தேடு 

3) சரியான இனை எது? 

4) தவறான இனை எது ?

5) சரியானவற்றை  பொருத்தி விடை காண்க 

6) கொடுக்கப்பட்டுள்ள படங்களின் சரியான வரிசை எது ? 

7) கொடுக்கப்பட்டுள்ள படத்தில் குறிக்கப் பட்டுள்ள X,Y மற்றும் Z ன் பெயரினைக் கண்டறி 

8) பின்வருவனவறில் எது சரியான ஏறுவரிசை அல்லது இறங்கு வரிசையில் அமைந்துள்ளது ? 9) கொடுக்கப்பட்டுள்ள வினாவின் அடிப்படையில் கூற்று மற்றும் காரணம் எவ்வாறு உள்ளது?

 10) அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகள், புத்தகங்களின் பெயர்கள்,வேறு பெயர்கள், வினைகள் நடைபெறும் இடம்,சுவாச ஈவு , சுவாச நிறமிகள், இதய அறைகள் மற்றும் செவுள்களின் எண்ணிக்கை,மூட்டுக்களின் வகைகள் மற்றும் எடுத்துக் காட்டு, சரியான Abbreviation  எது ? சுவாசக் கொள்ளளவு கள் மற்றும் கொள்திறன்களின் அளவுகள், தாவர ஹார்மோன்கள் மற்றும் அதன் பணிகள் , தாவரங்களில் காணப்படும் வேர்,தண்டு மற்றும் இலையின் மாற்றுருக்களுக்கான எடுத்துக்காட்டுகள் என நேரடியான வினாக்களும் கேட்கப்படும்.

 எனவே 

🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

 *அன்பான மாணவச் செல்வங்களே* தன்னம்பிக்கையுடன், *பொறுமை மற்றும் சிந்தித்து விடை எழுதும் தெளிவான பகுத்தறிவுடன்* நீட் தேர்வினை சிறப்பாக எழுதி *அதிக மதிப்பெண் பெற்று* தகுதியான மருத்துவர் ஆகி சமுதாயத்திற்கு சேவை செய்ய *வாழ்த்துகள்* .

குட்டி கதை

  ஒரு கிராமத்தில் யார் அறிவாளி என்று ஒரு போட்டி! இளைய தலைமுறை தான் அறிவாளிகள் என்று இளைஞர்கள் சொல்ல! வயதில் பெரியவர்கள் தான் என்று பெரியவர்க...